Saturday, November 25, 2006

சார்ஜாவில் இருந்து துபையை அடைய படும் பாடு

சரியாக காலை 5.30 மணிக்கு அலாரத்தை அலற விட வேண்டுங்க வேண்டா வெறுப்பாக எவ்வளவு அசதியாக இருந்தாலும் விரைந்து குளித்து தயாராகி விட வேண்டும். அதாவது 30-35 நிமிடங்களில் மணி 6.05 அல்லது 6.10 எல்லாம் காருக்குள் இருந்தாக வேண்டும் . (5 நிமிடம் தாமதித்தால் 100-150 கார்கள் பின்னால் நமது கார்) இப்படி சூப்பர் மேன் வேகத்தில் புறப்பட்டால் தேரா துபையை அடைய 45 நிமிடங்கல் ஆகும். அதாவது காலை 8 மணிக்கு தொடங்கும் வேலைக்கு அலுவலகத்தில் 6.45 திற்கே இருக்கும் நிலைமை.அரை ம்ணி நேரம் தாமதமாக கிளம்பினால் என்ன ஆகும் என்கிறீர்களா 9 மணிக்கு மேல்தான் ஆபிஸ். இது மட்டும் போதாது என்றால்சாலையில் கரை பம்பர் டு பம்பரிலேயே ஓட்டியாக வேண்டும் இல்லையென்றால் இன்னும் பின் தங்கி விடுவோம்?!.சாலை விதிகளை மீறாமல் மீறுபவர்களை சகித்து கொண்டு இன்ன பலகஷ்ட்டங்களை தினமும் அனுபவிப்பவனில் அடியேனும் ஒருவன் தாங்களில் யாரேனும் இதையே அனுபவிப்பவராக இருந்தால் சுமையை பகிர்ந்து கொள்ளலாம்.சரி இவவளவு கஷ்டப்பட்டு ஏன் சார்ஜாவில் தங்க வேண்டும் என்று கேட்கிறீர்களா இங்குதான் பிளாட் வாடகை குறைவாகவும் மற்றும் வசதிகள் நிறைய இருந்தது.அதற்கும் வைத்து விட்டார்கள் ஆப்பு துபை ரியல் எஸ்டேட் காரர்கள் அங்கு வாடகையை ஏற்ற சார்ஜாவை நோக்கி எடுத்தது கூட்டம் இப்ப இங்கும் மோசமான நிலமை.இதை தொடர்ந்து வாகன நெரிசலால் திட்டமிட்டபடிஇலக்கைஅடையமுடிவதில்லை.அரசாங்கம் எதையிம் கண்டு கொண்ட மாதிரி தெரியல.இந்த வாகன நெரிசலால் குறிப்பாக காலை நேரங்களில் அவசரமாக விமான நிலையமோ அல்லது ஆஸ்பத்திரிக்கோ செல்ல நிர்பந்தம் ஏற்ப்பட்டால் தலை கிழ் நின்று மன்றாடினாலும் நடக்காது என்பதே என் கருத்து.எனது வழி தடம் அல் வஹ்தா சாலையில் இருந்து தேரா துபை வரை.