Sunday, December 24, 2006

சுனிதாவுக்கு ஒரு நீதி சோனியாவுக்கு இன்னொரு நீதியா?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு டிஸ்கவரி விண்கலத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது இந்த விண்கலத்தில் 7 பேர் பயணம் செய்தனர்.இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மையத்தில் ஏற்ப்பட்டுள்ள மின்வசதி கோளாரை சரி செய்யும் பணிக்காக அனுப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் சுனிதா.இவரை இந்தியப் பெண் என்று இந்தியப் பத்திரிகைகள் அனைத்தும் வர்ணித்துள்ளன.

ஒருவர் இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டுமெனில் அவர் இந்தியாவில் பிறந்து இருக்க வேண்டும் அல்லது இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். இதில் எதையும் செய்யாத சுனிதாவை இந்தியப் பெண் என்று எப்படித்தான் சொல்கிறார்களோ தெரியவில்லை.

சுனிதாவின் தந்தை இந்திய வம்சா வழியை சேர்ந்தவர்.தாயார் போலாந்து நாட்டுக்காரர்.இவர்கள்அமெரிக்காவில் குடியேறி பல தலைமுறைகள் ஆகி விட்டன.அதுவும் சுனிதா முழுக்க முழுக்க அமெரிக்கர்.அப்படி இருக்கையில் சுனிதாவை இந்தியப் பெண் என்று சொல்வது ஏனோ?

சுனிதாவின் தாய் போலந்து நாட்டுக்காரர்.இருப்பினும் போலந்த நாட்டுக்காரர்கள் போலந்து பெண்மணி என்று சொல்வது இல்லை.சுனிதாவை இந்தியப் பெண்மணி என்று சொல்வது தராள மனப்பான்மையின் வெளிப்பாடல்லவா? என்கின்றனர் சிலர்.நன்றாக இருக்கட்டும்.அப்படி
சொன்னவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற தன்னை முழுக்க முழுக்க இந்தியராகவே மாற்றிக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியாவை மட்டும் வெளிநாட்டுக்காரர் என்று விமர்சிப்பது ஏன்?சோனியாவுக்கு ஒரு நீதி,சுனிதாவுக்கு ஒரு நீதியா?

சுனிதா தன்னை எந்த ஒரு கட்டத்திலும் இந்திய பெண் என்று சொல்லி கொண்டதே இல்லை.ஆனால் சோனியா "இந்த இந்திய நாட்டுக்காக தன் இன்னுயிரையும் தர தயார்" என்று கூறியிருக்கிறார்.இவரைப் போய் வெளிநாட்டுக்காரர் என்று வசைபாடுவது நியாயமா? என்பதே நமது கேள்வி.

இந்திய மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை அன்னியர்கள் என்று அடைமொழியிட்டு அவதூறு செய்யும் ஒரு கும்பல்தான் சுனிதாவை இந்தியப் பெண் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லி மனம் மகிழ்கிறது.அதுதான் நமக்கு நெருடலாக் இருக்கிறது இந்த ஆரியமாயை
மாய வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி -உணர்வு 22/12/06

7 comments:

'))'))> said...

test

'))'))> said...

சேனியா என்று தாங்கள் மீண்டும் மீண்டும் எழுதியது....சோனியா காந்தியையா? அல்லது சானியா மிர்சாவையா?
:-)

'))'))> said...

பிரபு சார் வருகைக்கும் பிழை திருத்ததிற்கும் நன்றி.

சானியா மிர்சா எப்ப காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனார்!?

'))'))> said...

சிவபாலன் என்பவர் முன்பு கல்பனா சாவ்லாவைப்பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார். அவருக்கு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன். அது நினைவுக்கு வருகிறது.

அமெரிக்கக்குடியுரிமை விரும்பிப் பெற்ற, இறப்புக்கு பின்னாலும் அமெரிக்கக்கொடியையே உடலில் போர்த்தப்பட்ட கல்பனாசாவ்லாவை இந்தியராகக் கருதுவோம். அவர் பெயரில் மத்தியிலும் மாநிலத்திலும் விருதுகள் அறிவித்து பெருமிதமடைவோம். ஏனெனில் அதில் 'சாதனை' இருக்கிறது. நம்மை ஒட்டிக்கொள்ளாவிட்டாலும் நாமாவது ஒட்டிக்கொள்வோம்.

அதே போல் ஐரோப்பியரான அன்னை தெரசாவை இந்தியர் என்போம். ஏனென்றால் அதில் கருணை இருக்கிறது. நம்மை ஒட்டிக்கொள்ளாவிட்டாலும்....

அதே போல் டென்சிங்...

அதே போல்....சுனிதா..

ஆனால் சோனியா... நாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்தாலும் - நோ வே! - ஏனென்றால் அதில் 'அரசியல்' இருக்கிறது.
ஆனால் ஒரு விஷயம், அவர் இந்துத்துவாவை பேசினால், அதற்காக செயற்பட்டால்... அப்போது அவர் ஆட்டோமேட்டிக்காக 'இந்தியர்' ஆகி விடுவார். :-((

'))'))> said...

நல்ல பதிவு. சரியான கேள்வி. இப்ப்டி பிதற்றிக்கொள்வது எல்லாம் வெளிநாட்டு வாழ் இந்தியரின் திறமையை(?), புதிசாலிதனத்தை(?) உலக, உள்நாட்டு அளவில் மிகைப்படுத்த ஒரு பொய் விளம்பரம் உருவாக்கி மார்தட்டிகொள்வதற்கு. மேலும் அமெரிக்கா என்றாலே ஒரு
தனி போதைதானே!

சோனியா காந்தி விடயத்தில் அரசியல், பதவி, அதிகார போட்டி இவரை இவரது பூர்வீக பெயரை சொல்லி மட்டம் தட்டுவதிலேயே கருத்தாக இருப்பதை புரிந்துகொள்ளவும் முடிகிறது. வருந்தத்தக்கது.

'))'))> said...

//ஆனால் ஒரு விஷயம், அவர் இந்துத்துவாவை பேசினால், அதற்காக செயற்பட்டால்... அப்போது அவர் ஆட்டோமேட்டிக்காக 'இந்தியர்' ஆகி விடுவார். :-(( //

ராஜா வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.

'))'))> said...

மாசிலா வருகைக்கும் கருதிற்கும் நன்றி.